search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவானிசாகர் அணை"

    • பவானிசாகர் அணை பூங்காவுக்கு இன்று ஞாயிற்று கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து இருந்தனர்.
    • சிறுவர் மற்றும் சிறுமிகள் பூங்காவில் ஊஞ்சலாடி குதுகளித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை பூங்காவுக்கு இன்று ஞாயிற்று கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து இருந்தனர்.

    இதை தொடர்ந்து குழந்தை களுடன் வந்து இருந்த அவர்கள் பூங்காவில் ஊஞ்சல் விளையாடினர். மேலும் பெண்கள் பலர் சறுக்கு விளையாடி ஒருவருக்கொருவர் குதுகளித்தனர்.

    பவானிசாகருக்கு இன்று காலை குறைந்த அளவே மக்கள் வந்து இருந்தனர். ஆனால் நேரம் செல்ல, செல்ல பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காண ப்பட்டது.

    இைததொடர்ந்து குடும்ப த்துடன் வந்திருந்த மக்கள் அணை பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். இதேபோல் புல் தரைகளிலும் சிறுவர்கள் பலர் விளையாடினர்.

    மேலும் சிறுவர் மற்றும் சிறுமிகள் பூங்காவில் ஊஞ்சலாடி குதுகளித்தனர். ெபாது மக்கள் அந்த பகுதி யில் இயற்கையை ரசித்து சென்றனர்.

    இதே போல் அணையில் கொட்டும் தண்ணீரின் அழகையும் சுற்றுலா பயணிகள் ரசித்தனர். மேலும் அந்த பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன் வகைகளையும் அவர்கள் ருசித்தனர்.

    இதனால் பவானிசாகர் பூங்கா பகுதியில் மக்களின் கூட்டமாகவே காணப்பட்டது.

    • சத்தியமங்கலம் அடுத்த காளிகுளம் பகுதியில் உள்ள கிளை வாய்க்காலில் உடைப்பு பெரிதாகி அதிக அளவில் நீர்கசிவு ஏற்பட்டது.
    • உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பணியாளர்கள் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி மாலை 120 நாட்கள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறந்த சிறிது நேரத்தில் சீரமைப்பு பணிகள் முடிவடையாத காரணத்தால் நிறுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து கடந்த 19-ந் தேதி மீண்டும் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக நீர்திறப்பு அதிகரித்து 2,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. தண்ணீரும் கடைமடை பகுதிக்கு சென்றடைந்தது.

    இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த காளிகுளம் பகுதியில் உள்ள கிளை வாய்க்காலில் உடைப்பு பெரிதாகி அதிக அளவில் நீர்கசிவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது.

    இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் காளிகுளம் பகுதியில் முகாமிட்டு உடைப்பை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பணியாளர்கள் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர். பின்னர் சிமெண்ட் சலவை மூலம் அடைத்தனர்.

    இதன் மூலம் நீர்கசிவு சரி செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று பவானிசாகர் அணையில் இருந்து மீண்டும் கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

    • நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் 2 நாட்களாக அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து வருகிறது.
    • தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் 2 நாட்களாக அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.81 அடியாக உள்ளது. அனைத்து வினாடிக்கு 1,927 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் சத்தியமங்கலம் அருகே நீர் கசிவு காரணமாக கீழ்பவானி வாய்க்காலுக்கு பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீர்கசிவு ஏற்பட்ட இடத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முகாமிட்டு சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் மாலை தண்ணீர் திறக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதேநேரம் காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • தற்போது தண்ணீர் வரவர கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் திறந்து விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    • குறிப்பிட்ட கால அளவுக்கு முன்னதாகவே தண்ணீர் கடைமடையை எட்டியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து இந்த ஆண்டுக்கான முதல் போகத்துக்கான தண்ணீர் கீழ்பவானி வாய்க்காலின் இரட்டைப் படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாயின் ஒற்றைப் படை மதகுகளில் கடந்த 15-8-2023 முதல் 13-12-2023 வரை 120 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

    ஆனால், கீழ்பவானி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்புப் பணிகள் முடிவடையாத நிலையில், ஆகஸ்ட் 15ம் தேதி மாலை 5 மணியளவில் தண்ணீர் திறக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே மீண்டும் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, மீண்டும் 19-ந் தேதி காலை 11 மணியளவில் பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    தொடர்ந்து அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. 20-ந் தேதி காலை 8 மணி நிலவரப்படி அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    இதுமேலும் தினமும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நேற்று காலை 8 மணி நிலவரத்தின் படி அணைக்கு வினாடிக்கு 2,200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டபோது 105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர் இருப்பு 82.71 அடியாக இருந்த நிலையில், தண்ணீர் திறப்பு அதிகரித்ததையடுத்து, அணையின் நீர் மட்டமும் படிப்படியாக குறைந்து தற்போது 80.46 அடியாக உள்ளது.

    இந்நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் கடந்த 19ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மாலையில் அதன் கடைமடைப் பகுதியான 125-வது மைலில் உள்ள மங்களப்பட்டியை எட்டியது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இதுகுறித்து, கீழ்பவானி பாசன பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி கூறியதாவது:-

    கடந்த 19-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து, குறிப்பிட்ட கால அளவுக்கு முன்னதாகவே தண்ணீர் கடைமடையை எட்டியுள்ளது. தவிர எப்போதும், கடைமடையை தண்ணீர் எட்டிய பின்னரே கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பார்கள். ஆனால், தற்போது தண்ணீர் வரவர கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் திறந்து விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    குறிப்பிட்ட கால அளவுக்கு முன்னதாகவே தண்ணீர் கடைமடையை எட்டியதற்கு காரணம், கடந்த போகத்தில் வாய்க்காலை முறையாக தூர் வாரி, மணல் திட்டுகளை அகற்றியதே ஆகும். காங்கிரீட் போட்டால் தான் தண்ணீர் கடைமடைக்கு போய்ச் சேரும் என கூறிவரும் சிலரின் கூற்று இதன் மூலமாக பொய்யாகியுள்ளது.

    பல்வேறு இடையூறுகளுக்கு இடையிலும், எங்களது கோரிக்கையை ஏற்று குறிப்பிட்ட காலத்தில், இந்த போகத்துக்கு, எவ்வித பாதிப்பும் இன்றி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுத்த மாவட்ட அமைச்சர் சு.முத்துசாமிக்கும், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மற்றும் சம்பந்தப்பட்ட நீர்வளத் துறை அதிகாரிகளுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் இன்று தண்ணீர் கடைமடையை எட்டியதையடுத்து அதைக் கொண்டாடும் விதமாக அப்பகுதி விவசாயிகள் கடைமடைப் பகுதியில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

    • அணையின் நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
    • குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.98 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக கடந்த 15-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் கீழ்பவானி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்புப் பணிகள் முடிவடையாததால் சிறிது நேரத்தில் தண்ணீர் மீண்டும் நிறுத்தப்பட்டது.

    பின்னர் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து கடந்த 19-ம் தேதி முதல் மீண்டும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் 200 கனஅடி திறக்கப்பட்டது.

    அதன் பிறகு படிப்படியாக நீர்ப்பரப்பு அதிகரித்தது. இந்த நிலையில் இன்று காலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,200 கன அடியாக அதிகரித்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 80.46 அடியாக சரிந்துள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 386 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கன அடியும், காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 3,300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணையின் நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதே போல் மாவட்டத்தின் மற்ற அணைகளின் நீர்மட்டமும் சரிந்து வருகிறது.

    குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.98 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 16.30 அடியாக உள்ளது. வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.52 அடியாக உள்ளது.

    • அணையின் நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
    • குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.98 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக கடந்த 15-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் கீழ்பவானி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்புப் பணிகள் முடிவடையாததால் சிறிது நேரத்தில் தண்ணீர் மீண்டும் நிறுத்தப்பட்டது.

    பின்னர் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து கடந்த 19-ந்தேதி முதல் மீண்டும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் 200 கனஅடி திறக்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நேற்று 1,800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,200 கனஅடியாக அதிகரித்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட அணையில் தற்போதைய நீர் மட்டம் 80.90 அடியாக சரிந்துள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 864 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 500 கனஅடி, காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 3,300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணையின் நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இதேபோல் மாவட்டத்தின் மற்ற அணைகளின் நீர்மட்டமும் சரிந்து வருகிறது. குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.98 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 16.40 அடியாக உள்ளது. வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.56 அடியாக உள்ளது.

    • பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,800 கன அடியாக அதிகரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
    • குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 25.02 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக கடந்த 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் கீழ்பவானி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்பு பணிகள் முடிவடையாததால் சிறிது நேரத்தில் தண்ணீர் மீண்டும் நிறுத்தப்பட்டது.

    பின்னர் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து கடந்த 19-ந் தேதி முதல் மீண்டும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் 200 கனஅடி திறக்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,800 கன அடியாக அதிகரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட அணையில் தற்போதைய நீர் இருப்பு 81.25 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 856 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கன அடி, காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணையின் நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதேபோல் மாவட்டத்தின் மற்ற அணைகளின் நீர்மட்டமும் சரிந்து வருகிறது.

    குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 25.02 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 16.53 அடியாக உள்ளது. வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.59 அடியாக உள்ளது.

    • தனியார் மீன்பிடி உரிமம் முடிந்த நிலையில் கடந்த 15-ந் தேதி முதல் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகமே நேரடியாக மீன்களை கொள்முதல் செய்தது.
    • பழையபடி தங்களுக்கு 55 ரூபாய் கூலியாக வழங்க வேண்டும் என்று வலியுறு த்தி கடந்த 15-ந் தேதி முதல் பவானிசாகர் அணைப்பகுதி யில் மீனவர்கள் மீன் பிடிப்பதை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர்.

    சத்தியமங்கலம்

    ஈரோடு மாவட்டம் பவா னிசாகர் அணையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் மூலம் மீன் குஞ்சுகள் விடப்பட்டு மீன் பிடிக்கும் உரிமம் தனியா–ருக்கு தரப்பட்டிருந்தது.

    இங்கு சுசில் குட்டை, அண்ணா நகர், வெற்றிவேல் முருகன் நகர், கண்ட்ராயன் மொக்கை போன்ற பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பரிசல் மூலம் மீன்களைப் பிடித்து வருகி ன்றனர்.

    நாள் ஒன்றுக்கு 2000 கிலோ மீன்கள் பிடித்து வந்தனர். இந்த மீன்கள் கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளு க்கு அனுப்பப்பட்டு வந்தது.

    தனியார் மீன்பிடி உரிமம் முடிந்த நிலையில் கடந்த 15-ந் தேதி முதல் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகமே நேரடியாக மீன்களை கொள்முதல் செய்தது.

    தனியார் குத்தகைதாரர் ஒரு கிலோ மீனுக்கு 55 ரூபாய் கூலியாக மீனவர்களுக்கு தந்த நிலையில் மீன் வளர்ச்சி கழகம் ஒரு கிலோ 35 ரூபாய் மட்டுமே வழங்குகிறது. இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பழையபடி தங்களுக்கு 55 ரூபாய் கூலியாக வழங்க வேண்டும் என்று வலியுறு த்தி கடந்த 15-ந் தேதி முதல் பவானிசாகர் அணைப்பகுதி யில் மீனவர்கள் மீன் பிடிப்பதை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று 7-வது நாளாக நீடித்து வருகிறது.

    • 105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட அணையில் தற்போதைய நீர் இருப்பு 82.54 அடியாக உள்ளது.
    • அணையில் இருந்து வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டால் அணையின் நீர்மட்டம் குறையும் நிலை ஏற்படும்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையில் இருந்து, இந்த ஆண்டுக்கான முதல் போகத்துக்கான தண்ணீர் கீழ்பவானி வாய்க்காலின் இரட்டைப் படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாயின் ஒற்றைப்படை மதகுகளில் கடந்த 15-ந் தேதி முதல் வரும் டிசம்பர் 13ஆம் தேதி வரை வரை 120 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

    ஆனால், கீழ்பவானி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்புப் பணிகள் முடிவடையாத நிலையில், ஆகஸ்ட் 15-ந் தேதி மாலை 5 மணியளவில் தண்ணீர் திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் நிறுத்தப்பட்டது.

    அதைத் தொடர்ந்து, மீண்டும் 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை செயற்பொறியாளர் திருமூர்த்தி தெரிவித்தார்.

    இந்நிலையில், அவர் தெரிவித்தபடி, 19-ந் தேதி காலை 11 மணியளவில் பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    தொடர்ந்து படிப்படியாக பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதுமேலும் அதிகரிக்கப்பட்டு நேற்று மாலை 4 மணிக்கு வினாடி க்கு 750 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்நிலையில், இன்று காலை 8 மணி நிலவரத்தின் படி அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,250 கன அடியாக அதிகரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட அணையில் தற்போதைய நீர் இருப்பு 82.54 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 217 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

    கீழ்பவானி வாய்க்கால் மூலமாக நேரடியாகவும், கசிவு நீர் மூலமாகவும் சுமார் 1.25 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்று வரும் நிலையில், வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக நடப்பு முதல்போகத்துக்கு தண்ணீர் திறக்கப்படுமா என பாசனதாரர்களும், இந்த வாய்க்கால் மூலமாக குடி நீர் ஆதாரம் பெறும் கிராம மக்களும் பெரும் அச்சத்துக்குள்ளாகி இருந்தனர்.

    இருப்பினும், ஆகஸ்ட் 15-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட அமைச்சர், மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் 4 நாள்கள் தாமதமானாலும் குறிப்பிட்டவாறு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு ள்ளது.

    இதனால், விவசாய முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டிருந்த விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

    கடந்த வருடங்களில் இதே காலகட்டத்தில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பி இருந்தது.

    ஆனால், தற்போது போதிய மழையின்மை காரணமாக 105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட அணையின் நீர் இருப்பு, தற்போது 82 அடியாக மட்டுமே உள்ளது.

    இதனால், அணையில் இருந்து வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டால் அணையின் நீர்மட்டம் குறையும் நிலை ஏற்படும்.

    இருப்பினும், போதிய மழை பெய்து அணையின் நீர்மட்டத்தை உயரச் செய்தும், கீழ்பவானி வாய்க்காலில் அதன் முழு அளவு தண்ணீரான வினாடிக்கு 2,300 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டு இந்த போகம் சாகுபடி எவ்வித பாதிப்புமின்றி நடைபெற வேண்டும் என்பதே கீழ்பவானி பாசன விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • கடந்த 15-ந் தேதி முதல் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகமே நேரடியாக மீன்களை கொள்முதல் செய்தது.
    • பழையபடி தங்களுக்கு 55 ரூபாய் கூலியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் மூலம் மீன் குஞ்சுகள் விடப்பட்டு மீன் பிடிக்கும் உரிமம் தனியாருக்கு தரப்பட்டிருந்தது.

    இங்கு சுசில் குட்டை, அண்ணாநகர், வெற்றிவேல் முருகன் நகர், கண்ட்ராயன் மொக்கை போன்ற பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பரிசல் மூலம் மீன்களைப் பிடித்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 2000 கிலோ மீன்கள் பிடித்து வந்தனர். இந்த மீன்கள் கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது.

    தனியார் மீன்பிடி உரிமம் முடிந்த நிலையில் கடந்த 15-ந் தேதி முதல் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகமே நேரடியாக மீன்களை கொள்முதல் செய்தது. தனியார் குத்தகைதாரர் ஒரு கிலோ மீனுக்கு 55 ரூபாய் கூலியாக மீனவர்களுக்கு தந்த நிலையில் மீன் வளர்ச்சி கழகம் ஒரு கிலோ 35 ரூபாய் மட்டுமே வழங்குகிறது. இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பழையபடி தங்களுக்கு 55 ரூபாய் கூலியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 15-ந் தேதி முதல் பவானிசாகர் அணைப்பகுதியில் மீனவர்கள் மீன் பிடிப்பதை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று 7-வது நாளாக நீடித்து வருகிறது.

    • சுமார் ஏழு ஆண்டுகள் பணி முடிந்து 1955 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் காமராஜர் அணையை திறந்து வைத்தார்.
    • 68 ஆண்டுகள் கடந்தும் இன்றும் கம்பீரமாக பவானிசாகர் அணை காட்சியளிக்கிறது.

    தென்னிந்தியாவின் 2-வது மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை பெற்றுள்ளது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2.47 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. அணையின் கரையின் நீளம் 8.78 கிலோமீட்டர். கீழ்பவானி பிரதான கால்வாயின் நீளம் 200 கிலோமீட்டர்.பிரதான கால்வாயில் இருந்து 800 கிலோமீட்டர் நீளத்திற்கு கிளை வாய்க்கால்கள், 1,900 கிலோமீட்டர் நீளத்திற்கு பகிர்மான வாய்க்கால்களும் வெட்டப்பட்டு ள்ளன.

    பவானி ஆறு மாயாறு சேரும் இடத்தில் ரூ.10.50 கோடி மதிப்பில், பவானிசாகர் அணை கட்டும் பணி 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொழில் நுட்ப எந்திரங்கள் இங்கிலாந்து நாட்டில் இருந்து வரவழைக்க ப்பட்டது. சுமார் ஏழு ஆண்டுகள் பணி முடிந்து 1955 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி அப்போதைய முதல்- அமைச்சர் காமராஜர் அணையை திறந்து வைத்தார். 68 ஆண்டுகளை கடந்தும் உறுதி தன்மையுடன் காட்சியளிக்கிறது.

    வரலாற்றுப் பெருமை வாய்ந்த பவானிசாகர் அணை இன்றுடன் 68 ஆண்டுகளை நிறைவு செய்து 69 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

    அணையில் ஆற்று மதகுகள் 9, கீழ்பவானி வாய்க்கால் மதகுகள் 3, உபரி நீர் ஸ்பில் - வே மதகுகள் 9 என 21 மதகுகள் உள்ளன. இதில் பவானி ஆற்று மதகுகளில் வெளியேற்றப்படும் நீரில் 8 மெகாவாட் மின்சாரம், கீழ்பவானி வாய்க்காலில் 8 மெகாவாட் மின்சாரம் என 16 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    பவானிசாகர் அணை 1955 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட நிலையில் 1957ஆம் ஆண்டு முதல் முறையாக அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. அதைத்தொடர்ந்து பல்வேறு வருடங்களில் முழு கொள்ளளவு எட்டி உள்ளது. கடந்த வருடம் 2022 ஆம் ஆண்டு வரை மொத்தம் 22 முறை பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 68 ஆண்டுகள் கடந்தும் இன்றும் கம்பீரமாக பவானிசாகர் அணை காட்சியளிக்கிறது.

    • சில மணி நேரத்தில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
    • நாளை விவசாயிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்டங்களில் 2.47 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையில் இருந்து ஆண்டு தோறும் ஆகஸ்ட் 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்கால் முதல் போக நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம்.

    இந்த வருடம் கீழ்பவானி வாய்க்காலில் பல்வேறு இடங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுமா? என்ற நிலை ஏற்பட்டது. விவசாயிகள் 15-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    இதனை ஏற்று திட்டமிட்டபடி ஆகஸ்ட் 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி நேற்று மாலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து 120 நாட்களுக்கு தண்ணீர் படிப்படியாக அதிகரித்து திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் சில மணி நேரத்தில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவு பெறாததால் தற்போது தண்ணீர் திறந்தால் பிரச்சனை ஏற்படும் என கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாளில் தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    தண்ணீர் நிறுத்தப்பட்டதால் கீழ் பவானி பாசன விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். நாளை விவசாயிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.

    ×